×

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடல்

சென்னை:  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், இந்த 4 மாவட்ட ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட் கட்டணத்தை ஜுன் 19ம் தேதிக்கு முன்பாகவோ அல்லது ஜூன் 30ம் தேதிக்கு பிறகோ பயணிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.


Tags : Closure ,Centers Closure ,Railway Ticket Booking Centers Railway , Railway tickets, booking centers closed
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...