×

நடத்தையில் சந்தேகம், கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பெண்கள் கொடூர கொலை: கணவன்கள் கைது

சென்னை: அனகாபுத்தூர் மற்றும் செங்குன்றம் பகுதியில் நடத்தையில் சந்தேகம், கள்ளக்காதல் விவகாரத்தில் 2 பெண்கள் கொலை செய்த கணவன்களை போலீசார் கைது செய்தனர். அனகாபுத்தூர், அயோத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சின்னையா (50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜானகி (47), மகன் விஜய் (26). சமீபகாலமாக சின்னையா தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னையா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார்.

தடுக்க முயன்ற மகன் விஜய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி உயிரிழந்தார். மகன் விஜய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து சின்னையாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். புழல் : செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் துளசிராம் (30). இவரது மனைவி அஞ்சம்மாள் (28). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளன`ர். அஞ்சம்மாள், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அஞ்சம்மாளுக்கும், துளசிராமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட தகராறில் துளசிராம் வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து அஞ்சம்மாளின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த துளசிராம் நேற்று மதியம் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Tags : murder ,women ,Husbands , Suspect, counterfeit, 2 women, murdered, husbands arrested
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...