×

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொரோனா மரணத்தை மறைக்கவில்லை

சென்னை:  ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் 2 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: ராயபுரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். யாருக்கேனும் நோய் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மிக நெருக்கமான பகுதி என்பதால் இங்கு அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதே தவிர சமூக பரவல் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரையை ஏற்று சரியான நேரத்தில் தற்போது ஊரடங்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவால் இறந்தவர்கள் குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும் தமிழக அரசு எதையும் மறைக்கவில்லை. வெளிப்படையாகவே உள்ளது. இதுகுறித்து சந்தேகம் இருந்தால் நீதித்துறையை நாடலாம்.

Tags : Jayakumar ,interview ,death , Minister Jayakumar's ,interview , not cover , corona's death
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...