×

விழி பிதுங்கும் உலக நாடுகள்!: பிரேசிலில் ஒரே நாளில் 38,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரேசில்: காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து, வைரஸ் பரவலில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளனான உலகின் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 1400 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாகி இருப்பதை அடுத்து, கோவிட் 19 மருத்துவ பரிசோதனையை பிரேசில் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, சோதனை கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் பரிசோதனை செய்து கொள்ளவில்லை.

தற்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்தேன் என தெரிவித்தார். அமெரிக்காவிலும், ஒரே நாளில் 26,000 பேரை தொற்றி இருக்கும் கோவிட் 19 வைரஸ், 850 உயிர்களை பறித்து சென்றுள்ளது. மெக்சிகோ, ரஷ்யா, பிரிட்டன் பெரு, சிலி, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலும் வைரஸ் தொற்றும் உயிரிழப்புகளும் மளமளவென அதிகரித்து வருகிறது. 210க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை 82 லட்சத்து 57 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 6,600 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள்.

Tags : Corona ,Brazil , Awakening, World Nations, Brazil, 38,000 people, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...