×

15 மண்டலங்களில் 588 பேருக்கு காய்ச்சல் அறிகுறி

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னையில் 15 மண்டலங்களில் நேற்று பரிசோதனை முகாம்கள் நடந்தன. இதுகுறித்து மாநகராட்சி வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவொற்றியூரில் 13, மணலியில் 10, மாதவரம் 13, தண்டையார்பேட்டை 35, ராயபுரம் 63, திருவிக நகர் 41, அம்பத்தூர் 23, அண்ணாநகர் 47, தேனாம்பேட்டை 46, கோடம்பாக்கம் 44, வளசரவாக்கம் 33, ஆலந்தூர் 24, அடையார் 32, பெருங்குடி 29, சோழிங்கநல்லூரில் 25 என மொத்தம் 478 முகாம்களில் நேற்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 27,577 பேர் காய்ச்சல் பரிசோதனை செய்துகொண்டனர். இவர்களில் 588 பேருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 207 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 109 பேருக்கும் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.


Tags : zones , Fever symptom , 15 zones
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...