×

4 மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதிகள் ஜூன் 30 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர், தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்ட நீதிமன்றங்கள் தற்போதை விதிமுறைகளின் படி செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : District Judges ,home , 4 District Judges, Chennai, Tiruvallur, Chengalpattu, Kanchipuram
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...