×

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலை பணிகள் மந்தம்: விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

நெய்வேலி: விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்குவழிச்சாலை பணிகள் மந்தமாக நடப்பதால் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி செல்லும் பேருந்துகள் இச்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன.

மேலும் என்எல்சி நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள் அனல் மின் நிலையங்களுக்கு பயன்படுத்தபடும் உதிரி பாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இச்சாலை வழியாக என்எல்சி நிறுவனத்திற்கு செல்கின்றது.  இச்சாலை கடந்த பல வருடங்களாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் சாலையை விரிவுபடுத்தி நான்குவழிச்சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சாலையின் இரு புறங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது  இதில் நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல்கள் எழவில்லை என்றாலும்  சாலை அமைப்பதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடைபெறுகிறது.

இந்த சாலை அமைக்கும் பணிக்கு என்எல்சி நிர்வாகம் தங்கள் ஏரியில் சேமிப்பு வைத்திருந்த சாம்பல் கழிவுகளை இலவசமாக சிறப்பு அனுமதி பெற்று வழங்கி வருகிறது. இந்த சாம்பலை  நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வந்து தினமும் சாலையில் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களில் நிரப்பபட்டு வருகின்றது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடை பெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலை நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் இதுவரை நடைபெறவில்லை.

தற்போது சாலை பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். தற்போது இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி தினந்தோறும் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நான்குவழிச் சாலை பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : road slowdown ,motorists ,Mantham , Vikravandi-Thanjavur, Four Road Works, Mantham
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி