டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேரளா, பஞ்சாப், உத்தரகாண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட 21 மாநில முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காணொலிக் காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இந்த ஆலோசனையானது நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுடன் இன்று ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் நாளை ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.