×

இளம்பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய வழக்கு காசி, கூட்டாளியிடம் 5 நாள் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி

நாகர்கோவில்: சமூக வலைதளங்கள் மூலம் பழகி, சென்னை பெண் டாக்டர் உள்பட பல இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து, பணம் பறித்த நாகர்கோவிலை சேர்ந்த காசி (26) குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். இவரது கூட்டாளி டைசன் ஜினோ (19) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக காசி மற்றும் அவரது கூட்டாளியை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட் டில் சிபி சிஐடி போலீசார் மனு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. காசி மற்றும் கூட்டாளியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர்.



Tags : partner ,interrogation ,girls ,CBCID , CBCID , 5-day ,interrogation , partner
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்