சென்னை: அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.