×

எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலி; பேரவை செயலாளர் அறிவிப்பு

சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைந்ததையடுத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானததாக பேரவை செயலாளர் அறிவித்தார். தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை, 97 ஆக குறைந்தது. பிப்ரவரி, 27ல், திருவொற்றியூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி மறைந்தார்.

அதற்கு அடுத்த நாள் குடியாத்தம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ. காத்தவராயன் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், தி.மு.க.,வின் பலம் 100ல் இருந்து 98 ஆக குறைந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைந்ததையடுத்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சட்டசபையில், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி என மூன்று சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையும் 97 ஆக குறைந்துள்ளது. சட்டசபை தொகுதி காலியாக இருந்தால், ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, ஓராண்டு கூட இல்லாததாலும், தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், மூன்று தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : death ,Chepakkam - Thiruvallikeni ,MLA ,Council , MLA J.Annabhagan, Cheppakkam, Tiruvallikeni, Secretary to the Council
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்