சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 19 முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.