×

சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு: பீஜிங்கில் ஊரடங்கு அறிவிப்பு

பீஜிங்: சீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 10 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து பீஜிங்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அணைத்து மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் துணைப் பிரதமர் சன் சுன்லன்  தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பிற்பகுதியில் அனைத்து அரசு சுகாதார நிறுவனங்களும் ஜின்ஃபாடி உணவு சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்த எவருடனும் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களை  14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலை மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டது.

இதனால் சந்தை மூடப்பட்டு அதைச் சுற்றியுள்ள பல குடியிருப்பு தோட்டங்கள் மூடப்பட்டன. இப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பீஜிங் ஒரு அசாதாரண காலத்திற்குள் நுழைந்துள்ளது என்று நகர செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் தெரிவித்து உள்ளார்.

Tags : Beijing ,China ,Corona , China, according to figures, 49 new, Corona record, Beijing, curfew
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...