திருச்சி: மேட்டூர் அணையிலிருந்து 12ம் தேதி திறந்துவிடப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்தடைந்தது. விநாயகர் கோயிலில் பூஜைகள் செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கொம்பில் காவிரி நீரை வரவேற்றனர். முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் வரும் நிலையில் படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.