டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயமாகியுள்ளனர். காலை 8.30 மணியிலிருந்து இருவரையும் காணவில்லை என இந்திய தூதரகம் புகார் தெரிவித்துள்ளது. மாயமான இருவரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான2 அதிகாரிகளை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.