×

அதிமுக எம்எல்ஏ குடும்பத்தினர் 30 பேருக்கு கொரோனோ பரிசோதனை

சென்னை:  ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு  நேற்று முன்தினம் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனிக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போரூர் அடுத்த மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ.,விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 இந்நிலையில் குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ குழுவினர் எம்.எல்.ஏ. வீட்டிற்கு நேற்று சென்றனர். அங்கு எம்.எல்.ஏ.வின் மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் உள்பட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. மேலும் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கபட்டுள்ளனர்.  மதனந்தபுரம் பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : examination ,AIADMK MLA ,Coronal Examination , Coronal examination of 30 members of AIADMK MLA's family
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை