×

காஞ்சிபுரம் அருகே பேப்பர் மில்லில் தீவிபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூர் பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் மில்லில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாகின. காஞ்சிபுரத்தை அடுத்த வேளியூரில் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.  காஞ்சிபுரத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள்  சம்பவ இடத்திற்குச்  சென்று, அக்கம் பக்கத்தில் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் வேளியூர் ஏரிக்கரையில் உள்ள புல்வெளியில் தீப்பிடித்து அந்த நெருப்பு காற்றில் பறந்து பேப்பர் மில்லில் விழுந்து தீ பிடித்ததில் அங்கிருந்த தேவை இல்லாத அட்டைப்பெட்டிகள் காகிதங்கள் போன்றவை எரிந்து சாம்பலானது தெரி்யவந்தது. மேலும் இந்த தீவிபத்தால் பொருள் சேதமோ உயிர்சேதமோ ஏதும் இல்லை என தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார் தெரிவித்தார்.


Tags : Paper Mill ,Kanchipuram ,Fire , Kanchipuram, Paper Mill, Fire Island
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...