சென்னை: 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ள நிலையில் இம்மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியாகிறது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் பின்னர் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 10-ம் தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.
இதனையடுத்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று தொடங்குகிறது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும் என்பதால் இந்த மாத இறுதியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளனர். ஒரு பாடத்திற்கான தேர்வு முடிவை திருத்தி வைத்துவிட்டு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.