×

சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா?: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது அமமுகவினரின் நம்பிக்கையாக இருக்கலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில் நேற்று நடந்த நிவாரணப்பொருட்கள் வழங்கும் விழாவுக்குப் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் தான் எல்லா துறைகளுக்கும் தலைமை. அவர் அனுமதி இல்லாமல் எந்த துறையிலும் அணுவும் அசையாது. திமுக எம்எல்ஏவை தொடர்ந்து, தற்போது, அதிமுக எம்எல்ஏவுக்கும் கொரோனா தொற்று வந்துவிட்டது. அனைவரும் பாதுகாப்பாக கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் நிகழும் என்பது அமமுகவினருடைய நம்பிக்கையாக இருக்கலாம். இதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.



Tags : Sasikala ,Selur Raju ,Minister , Politics change ,Sasikala, comes out, Interview ,Minister Selur Raju
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை