முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஈசிஆர் சாலையில் ஓட்டல் நடத்தி வருபவர் சபீர்அகமது (36). இவரிடம் குமார் என்பவர் ஓசி பிரியாணி கேட்டார். தராததால், 7 பேர் கும்பலுடன் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து நேற்றுமுன்தினம் இரவு ஓட்டலை சூறையாடினர். அதை தடுத்த சபீர்அகமதை தாக்கி கத்தியால் குத்தினர். முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் வினோத் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.