திருவாரூர்: திருவாரூர் அத்திக்கடையில் சர்புதீன் என்பவரது வீட்டில் 220 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மனைவி, குழந்தைகளுடன் உறவினர் வீட்டுக்கு சர்புதீன் சென்றதை அறிந்து கொள்ளையர் கைவரிசை காட்டியுள்ளனர்.