திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள், வங்கதேசத்தினர் 7வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு முடிந்ததும் விடுவிக்காமல் முகாமில் அடைத்து வைத்திருப்பதாக 54 பேரும் புகார் தெரிவித்துள்ளனர். இடைக்கால பிணையிலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 54 பேரும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.