×

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது; பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல்

டெல்லி: பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்த் சிங்கின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது எனவும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான MS Dhoni: The Untold Story- ல் இவர் தோனியாக நடித்திருந்தார். மேலும் பி.கே., கேதர்நாத், சுத்தேசி ரொமான்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். இவரது தற்கொலையால் பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் மரணத்திற்கு பல்வேறு திரைத்துறையினரும், விளையாட்டு வீரர்களும், இரங்கல் தெரிவித்து வருகினறனர். இவரது மறைவுக்கு ஸ்மிருதி இராணி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் வயதில் ஏன் இந்த முடிவது எடுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் இரங்கல்

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் மறைவு அனைவருக்கும் இழப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார். 2018ம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.


Tags : Sushant Singh ,Narendra Modi ,demise , Bollywood actor Sushant Singh, late, Prime Minister Narendra Modi, condolences
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...