×

சிவகங்கையில் கொரோனாவை விரட்டும் 27 மூலிகைகள் அடங்கிய அற்புத டீ: 5 - 7 நாட்களில் குணமடைந்து வரும் நோயாளிகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளோடு மூலிகை டீயையும் கொடுத்து, அவர்களை சில நாட்களிலேயே பாதிப்பிலிருந்து மருத்துவர்கள் மீட்கின்றனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனின் அனுமதியோடு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு, காலை, மாலை வாதம் பித்தம் கபம் விஷசுரம் டீ என்ற மூலிகை டீ வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய கூட்டு சிகிச்சையால், சிவகங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் சுமார் 5 முதல் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர்.

27 மூலிகைகள் அடங்கிய மூலிகை டீ

இந்த ஆரோக்கியமிக்க மூலிகை டீயை காரைக்குடி ஆவுடைப்பொய்கையைச் சேர்ந்த மூலிகை மருத்துவரான சி.சொக்கலிங்கம் என்பவர் வழங்கி வருகிறார்.இந்த மூலிகை டீயில் ஏலம், போய்புடல், கண்டங்கத்தரி, அதிமதுரம், ஆடாதொடை, சுக்கு, வால்மிளகு, மஞ்சள், திப்பிளி, கிராம்பு, துளசி உள்ளிட்ட 27 மூலிகைகள் சேர்க்கப்படுகிறது, மூலிகை டீயில் சேர்க்கப்படும் அனைத்தும் உணவுப்பொருட்கள் என்பதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

வாதம் பித்தம் கபம் விஷசுரம் டீயை கொரோனா பாதித்தோர் மட்டுமல்லாமல் அனைவரும் காலை, மாலை இருவேளையும் குடிக்கலாம் என்று அதனை தயாரிக்கும் மூலிகை மருத்துவரான சி.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோயாளிகள் காலை மாலை என இரு வேளையும் சுமார் 50 மி.லி. மூலிகை மருந்தையும், சாதாரண மக்கள் 25 மி.லி-ம், குழந்தைகள் 10 முதல் 15 மி.லி-ம் குடிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் வழங்க முடிவு

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு ஆங்கில மருந்துகளோடு, மூலிகை டீயும் சேர்த்து கொடுக்கும்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் மூலிகை டீ தொடர்ந்து கொடுக்க சொல்லியுள்ளேன்,’ என்று கூறினார்., ஓரிரு தினங்களில் பொடியாக தயாரித்து அனைத்து மாவட்டங்களிலும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Tags : Sivaganga , Sivaganga, corona, repellent, 27 herbs, tea, cure, patients
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...