புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளனர், இதனையடுத்து அதிக நிதி ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.