×

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 3, 000 பேர் எழுதிய தேர்வில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். ஆன்லைன் தேர்வில் வட இந்தியர்களுக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன எனவும் ராமதாஸ் சாடியுள்ளார். தற்போது நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய தேர்வு நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Tamils , Southern Railway Service, Select, Tamil, Injustice, Ramadas
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!