சென்னை: சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என துரைமுருகன் சொன்னபோது முதல்வர் பழனிசாமி கிண்டல் செய்தார் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று 150 ஊழியர்களுக்கு கொரோனா தாக்கியதால் தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளதாக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.