×

சென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா : ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டியது எண்ணிக்கை.. 6 மண்டலங்களில் அசுர வேட்டை!!

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,056 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 15,765 பேர் குணமடைந்துள்ள நிலையில் 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.04% பேர் ஆண்கள், 39.95% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 14ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 5,056
கோடம்பாக்கம் – 3,652
திரு.வி.க நகரில் – 2,772
அண்ணா நகர் – 2,960
தேனாம்பேட்டை – 2,846
தண்டையார் பேட்டை – 3,928
வளசரவாக்கம் – 1,136,
அடையாறு – 1,725,
திருவொற்றியூர் – 1,113,
மாதவரம் – 814
பெருங்குடி – 551,
சோளிங்கநல்லூர் – 560,
ஆலந்தூர் – 593,
அம்பத்தூர் – 1,058,
மணலி – 434 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 623 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,Chennai ,zones ,monster hunt , Chennai, Corona, Royapuram, Hunting
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...