×

தெற்கு ரயில்வே பாதுகாவலர் பணிக்கு தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு: மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை:  மதுரை எம்பி சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வேயில் சரக்குவண்டியின் பாதுகாவலர் பதவிக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. துறையில் பணியாற்றுகிற சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வில், 96 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீதமுள்ள 91 பேரும்  வட இந்தியர்கள்.

தேர்வு எழுதியவர்களில் சுமார் 3,000 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் ஐவர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தெற்கு ரயிவேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Su Venkatesan ,Madurai ,Tamil Nadu , Only five Tamil Nadu ,candidates , Southern Railway Protector job, Madurai MP
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...