×

கொரோனா நேரத்தில் சசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை: கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முதல்வர் தினமும் மருத்துவ குழுவினருடன் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதேபோல் அமைச்சர்களை அவரவர் மாவட்டங்களில் வாரந்தோறும் 5 நாள் தங்கியிருந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் சசிகலா பற்றி யோசிக்க நேரமில்லை. கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படும் இந்த நேரத்தில் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு இடமில்லை. அந்த சிந்தனையே அதிமுக அரசிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kadambur Raju ,Sasikala ,Corona , No time ,think about Sasikala,Corona,Interview, Kadambur Raju
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!