×

கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேதம், ஹோமோயோபதி மருந்துகளைப் பயன்படுத்தும் மராட்டியம் : 55 வயது மேற்பட்டோருக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 விநியோகம்

மும்பை : கொரோனா பரவலைத் தடுக்க ஆயுர்வேதம், ஹோமோயோபதி மருந்துகளைப் பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை கொரோனா நோயை ஆர்சனிகம் ஆல்பம் 30
மருந்து குணப்படுத்தும் என்பதற்கு எவ்வித சாட்சிகளும் இல்லை என்பதால் பரிசோதிக்கப்படாத மருந்துகளை கொரோனாவுக்குப் பயன்படுத்திடுவது பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்ற கருத்தும் மருத்துவர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

மகாராஷ்டிராவில் புயல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருந்துக்களைப் பயன்படுத்த அம்மாநில முடிவு செய்துள்ளது. இதற்கு அடித்தளமாக கிராமப் புறங்களில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்டோரைக் கண்டறிந்து  ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை சோதனை அடிப்படையில் டெல்லி, மும்மை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தது. ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனமும், ஹோமியோபதி மருந்துகள் வெகுஜன நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், இதுவரை  ஆர்சனிகம் ஆல்பம் 30 கோரோனோ நோயைத் தடுக்கும் என்று ஆதாரமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மருந்துகள் பொதுவாக சுவாசப் பிரச்னைக்கு மட்டுமீ அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மகாராஷ்டிரா அரசு பரிந்துரைத்த சில மருந்துகள்

*காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மூலிகை மருத்து சன்ஷமணி வதி 500 மி.கி , 15 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

*மலேரியாவுக்கு எதிராக பயன்படும் ஆயுஷ் 64 மாத்திரை, 15 நாட்களுக்கு உபயோகிக்கலாம்.

*சுவாச பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் அகஸ்திய ஹரிதகி 15 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.


Tags : Corona ,Maratham , Corona, Ayurveda, Homeopathy, Drugs, Maratham, 55 Years, Arsenicum Album 30, Distribution
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...