சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.