×

கொரோனாவால் உயிரிழப்புகள் இனி ஏற்படாது : வைரஸால் ரத்தம் உறைந்து போவதை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்தது ஆஸ்திரேலியா!!

சிட்னி : ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ரத்தம் உறைந்து போவதைக் கட்டுப்படுத்த சோதனை முறையில் கண்டறியப்பட்ட மருந்து வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 300 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 102 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கிறது. உடலில் செல்லும் கொரோனா வைரஸ் ரத்தத்தை உறைய வைத்து ஆக்சிஜன் சப்ளையை தடுத்து நிறுத்துகிறது. ஆக்சிஜன் சப்ளை தடைப் படுவதால் உடல் உறுப்புகள் செயலிழப்பது, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு சிலர் மிகவும் சிரமப்பட்டு தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா, சிட்னி பல்கலைகழத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் என்பவர் ஆய்வாளர்களுடன் இணைந்து ரத்தம் உறைவதைத் தடுக்க மருந்து ஒன்றைச் சோதனை முறையில் கண்டறிந்தனர்.இந்த மருந்து தொடர்பாக முதல் சோதனை வெற்றியடைந்தது. இப்போது 2ம் கட்ட சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் நோயின் தாக்கம் அதிகம் இல்லாத காரணத்தால், வெளிநாடுகளில் 2ம் கட்ட சோதனையை மேற்கொள்ள ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் உலகில் அனைத்து இடங்களில் இந்த மருந்து கிடைக்கும் நிலை உருவாகும் என நம்பப்படுகிறது. இதனிடையே இந்த மருந்து குறித்து பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் கூறும்போது, கொரோனா பாதிப்பால் உடல் உறுப்புகள் செயலிழந்து, உயிரிழப்புகள் இனி ஏற்படாது. கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படாத நிலையை உருவாக்க நாங்கள் இந்த மருந்து ஆய்வை முன்னெடுத்தோம்” என தெரிவித்தார்.

Tags : Coronavirus deaths ,Australia ,deaths , Corona, casualties, virus, blood, freeze, drug, invented, Australia
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை