×

நோயாளி போல் உடையணிந்து கொரோனா பெண்கள் வார்டில் புகுந்த ஆசாமியால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில்  அரசு புறநகர் மருத்துவமனை உள்ளது. இங்கு  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வார்டு அமைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நோயாளி அணியும் உடையணிந்து, பெண்கள் வார்டில் புகுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். இதனால், பயந்து போன அந்த நபர், கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், உடலை காயப்படுத்திக் கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு, விசாரித்தனர்.

அதில், அவர் பெயர் செல்வம் (35) என்பதும், மருத்துவமனையில் தூய்மை பணியில் வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே செல்வம் செவிலியர்கள் உடைமாற்றுவதை செல்போனில் படம் பிடித்ததாக இவரை மருத்துவமனை நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : women ,Corona ,Asami ,patient , Patient, Corona, Women's Ward
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...