×

விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

செங்கம்: சென்னை முதல் சேலம் வரை அமைக்கப்படும் 8 வழி பசுமைச்சாலையால், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் சுமார் 30 கிராமங்களைச்  சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவும் பெற்றனர். இந்நிலையில், 8 வழிச்சாலை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு காவல்துறையை ஏவி, விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டி வருவதாக கூறி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் நேற்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : demonstration , Farmers, black flag ,demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்