×

கிருஷ்ணகிரி யானை, பவானிசாகரில் விடுவிப்பு

சத்தியமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து 3 விவசாயிகளை அடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம்  கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் விடுவதற்காக  கொண்டு வந்தனர்.
அப்போது, பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள காராச்சிக்கொரை, புங்கார், பெரியார் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து காராச்சிக்கொரை பஸ் ஸ்டாப் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹாடா பகுதியில் யானையை விட்டனர்.

Tags : Bhawanisagar , Krishnagiri Elephant, Bhawanisagar
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்