விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள வேலியம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற மன்னாதீஸ்வரர் கோயிலில் தீமிதி திருவிழா நடத்துவதற்காக கிராம மக்கள், தீக்குண்டத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் வேலியம்பாக்கம் கிராமத்துக்கு விரைந்து சென்று கோயில் திருவிழாவை தடுத்து நிறுத்தினர். பின்னர் திருவிழாவுக்காக வந்திருந்த பொதுமக்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.