சென்னை: தேர்வுத்துறைக்கு பொறுப்பு அதிகாரியாக தொடக்க கல்வி இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இயக்குநராக உள்ள உஷாராணி கடந்த வாரம் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, தேர்வுத்துறையின் பணிகளை கவனிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் பழனிச்சாமியை பொறுப்பு அதிகாரியாக நியமித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.