சென்னை: சென்னை கொளத்தூரில் முன்விரோதம் காரணமாக ரமேஷ்(23) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அபி, சரண் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கொலையில் ஈடுபட்ட சரவணன், பாரதி, சுரேஷ், அலி ஆகியோரை கொளத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.