×

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான அசோக் சவாண், அமைச்சர் ஜிதேந்திர அவாத் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதியாகியிருந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவ சிகிச்சையில் முழுவதும் குணமாகினர். இந்நிலையில், கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரது உதவியாளர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் உதவியாளர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களது உதவியாளர்களும் தனிமைப்டுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். மாரத்வாடா பகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். இந்த வாரத் தொடக்கத்தில் மாநில செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Tags : minister ,Maharashtra , Maharashtra, Minister, Corona, Private Hospital, Mumbai
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கு;...