×

கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும் அலட்சியம்: சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்த 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு!

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின், அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருநெல்வேலி அருகே தாய் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வரும் மகனுக்கு ஹால் டிக்கெட் வாங்குவதற்காக கடந்த 7ம் தேதி சென்னையில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

தாய் வீட்டுக்கு சென்றதும் மகனுக்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவனுடன் வந்த தாய், தங்கையை மருத்துவ பிரிசோதனைக்கு அழைத்தபோது, அவர்கள் வர மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருகுல ராமன் அளித்த புகாரின் பேரில் பரிசோதனைக்கு வர மறுத்த பெண்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனரையும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags : women , Corona, Tirunelveli, Ambasamudram, women, case
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ