×

கொரோனாவிற்கு முத்த சிகிச்சை அளித்த சாமியார் பாபா, அந்த கொரோனாவுக்கே பலியான சோகம் : முத்தமிட்ட 24 பக்தர்களுக்கு வைரஸ் பாதிப்பு!!

போபால் : முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அஸ்லாம் பாபா, அதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாடாய் படுத்திக் கொண்டு வருகிறது. கொத்து கொத்தாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது மருந்து கண்டுபிடித்து விட வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்லாம் பாபா என்ற சாமியார் முத்தம் கொடுத்து கொரோனாவை குணப்படுத்துவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை நம்பி ஏராளமான பொதுமக்களும் ஓடி வந்துள்ளனர். இவர்கள் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பலரின் கைகளில் முத்தமிட்ட அஸ்லாம் பாபா என்ற சாமியார், கடைசியில் அந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலேயே இறந்துபோனார். அவரின் அற்புத சக்தி, அவரைக்கூட காப்பாற்றவில்லை. அப்பகுதியில், இதுவரை மொத்தம் 85 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 24 பேர் அந்த சாமியாரின் பக்தர்கள். அதாவது அவரிடம் இருந்து முத்தம் பெற்றவர்கள் ஆவர். மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மக்கள் தொடர்ந்து அந்த சாமியாரை நாடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாபாவிடம் ஆசி பெறச் சென்ற பலரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

Tags : Samyar Baba ,coroner , Coronation, kiss therapy, samyar, baba,, sacrifice, sadness, 24 devotees, virus, vulnerability
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...