×

வயநாடு அருகே மர்மமான முறையில் புலி உயிரிழப்பு

பந்தலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், புள்பளி அருகே செதலையம் வனச்சரகம் 5ம் வயல் வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து, வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு செதலையம் மாவட்ட வனஅலுவலர் ஆசிப் மற்றும் வனத்துறையினர், கால்நடை மருத்துவர் அருண் சக்கரியா ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்த புலி சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரியவந்தது. மர்மமான முறையில் இறந்து கிடந்த புலியை உடல் கூறு பரிசோதனைக்காக வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். உடல் உறுப்பு ஆய்வுக்குப் பின்னரே புலி இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : deaths ,Tiger ,Wayanad , Tiger deaths , Wayanad
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...