×

மருதமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் பீதி

கோவை:  கோவை வனச்சரகத்திற்குட்பட்ட மருதமலை கணபதி நகர் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள பாறை ஒன்றில் ஓய்வு எடுக்க தொடர்ந்து வருகிறது. குடியிருப்பு அருகே சிறுத்தையை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதனை மொபைலில் புகைப்படம் எடுத்தனர். இந்த சிறுத்தை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி குடியிருப்பு அருகேயுள்ள பட்டியில் இருந்த மாடுகளை வேட்டையாட முயன்றுள்ளது. மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : Marathamalai ,Leopard , Maruthamalai, leopard, people panic
× RELATED மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்