×

ஊரடங்குக்குப் பிறகு 6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க மத்திய அரசுக்கு NCERT பரிந்துரை

டெல்லி: ஊரடங்குக்குப் பிறகு 6 கட்டங்களாக பள்ளிகளைத் திறக்க மத்திய அரசுக்கு NCERTபரிந்துரை செய்துள்ளது. முதலில் 11 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒரு வார காலம் கழித்து 9 மற்றும் 10-ம் வகுப்புகளை செயல்பட அனுமதிக்க வேண்டும். 2 வாரங்களுக்கு பின்னர் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி. 3 வாரங்களுக்கு பின்னர் 3 முதல் 5 வரை உள்ள வகுப்பு மாணவர்களை அனுமதிக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குப் பின் 1 மற்றும் 2-ம் வகுப்புகள் செயல்பட அனுமதிக்கலாம். 5 வாரங்களுக்கு பின்னரே மழலையர் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.


Tags : NCERT ,schools ,curfew ,Central Government ,Government , Curfew, Federal Government, NCERT
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...