டெல்லி: டெல்லியில் இதுவரை 2,098 சடலங்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாநகராட்சி தலைவர்கள் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 984பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக கூறியுள்ள நிலையில் மாநகராட்சி தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. டெல்லி தெற்கு மாநகராட்சியில் 1,080,வடக்கில் 976, கிழக்கில் 42 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.