×

மும்பையில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

மும்பை: அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மும்பையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். நேற்று மும்பையில் நடந்த சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் கூறியதாவது, மராட்டிய சட்டசபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்க இருந்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் தற்போது கொரோன வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நமக்கு அச்சத்தை ஏறபடுத்துகிறது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மக்களின் உடல் நலனுக்காக தான் வெளிப்புற உடற்பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல் நலனை கெடுத்து கொள்வதற்காக அல்ல அனுமதி வழங்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்ற வேண்டும் அல்லது ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். ஆனால் மக்களின் நலனுக்காக கூறப்படுவதால் மக்கள் அரசின் உத்தரவுகளை மதிப்பார்கள் என நம்புகிறேன். அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக புறநகர் மின்சார ரயில் சேவையை தொடங்க வேண்டும். சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பலர் பயணம் செய்ய முடியாமல் உள்ளனர் என முதல்வர் தெரிவித்தார்.

பேட்டியின் போது உடன் இருந்த துணை முதல்வர் அஜித்பவார் கூறுகையில், நிசர்கா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சேதம் அடைந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பயிர் நாசம் அடைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அஜித்பவார் கூறினார்.


Tags : Udhav Thackeray ,Mumbai , Mumbai, Essential Work, Employee, Electric Train, Operating, Uddhav Thackeray
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!