×

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பது பற்றி நாளை விளக்கம் தர தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுநல வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு பின் அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஊரடங்கு தீவிரப்படுத்துமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து ஊரடங்கு தொடர்பாக பொதுநல வழக்க எதையும் எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Tags : Chennai ,Government of Tamil Nadu ,Icort , Corona, Chennai, Curfew, Government of Tamil Nadu, High Court
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...