×

கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 4,207 பேர் பாதிக்கப்பட்டுள்ள சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும் உள்ளது. சேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகள், எழும்பூர் தொகுதியின் 2 வார்டும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும். ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும் துறைமுகம் தொகுதியில் 1,456 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேருக்கும் எழும்பூரின் 2 வார்டுகளில் 630 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : someone ,area ,Jayakumar ,Corona ,Minister Jayakumar , Corona, 2 times, 14 days, loneliness, Minister Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...