புதுடெல்லி: நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா பரவல் நிலை குறித்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று பற்றி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.